திருமங்கலம் அருகே வாகன சோதனையில் 9 லட்சம் மதிப்பிலான 1.5 டன் குட்கா பறிமுதல்

மதுரை: திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம் போலீஸ் எஸ்.ஐ. பாலமுருகன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். மினி லாரியில் பண்டல் பண்டலாக குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் லாரி டிரைவர் மாடசாமி (வயது 32). அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர். புகையிலை பொருட்களை சேலத்தில் இருந்து விருதுநகருக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மினி லாரி மற்றும் 9 லட்சம் ரூபாய் பெருமானமுள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாடசாமியிடம் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu