/* */

மதுரையில் மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

மதுரையில் மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
X

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது-ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மல்லிகைப்பூ சீசன் இருக்கும். இந்த சமயத்தில் மதுரையை சுற்றியுள்ள அவனியாபுரம், சின்ன உடைப்பு, பெருங்குடி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மல்லிகைப்பூ அதிகளவில் பூக்கும். பனி அதிகமாக கொட்டும் நேரங்களில் பூக்கள் விளைச்சல் இருக்காது. தற்போது பனி அதிகஅளவில் பெய்கிறது. கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

இதனால் பெரும்பாலான பூக்கள் உற்பத்தி குறைந்து உள்ளது. அந்த வகையில் மல்லிகைப்பூ உற்பத்தியும் மிக மிக குறைந்துவிட்டது. இந்தநிலையில் முகூர்த்த நாட்களில் மல்லிகைப்பூ உள்ளிட்ட சில வகை பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. அதன்படி தான் நேற்று பல்வேறு விழாக்களின் காரணமாக மல்லிகைப்பூக்கு கடும் கிராக்கி இருந்தது. ஆனால் விளைச்சல் இல்லாத காரணத்தினால் மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ வரத்து குறைவாக இருந்தது.

இதனால் மல்லிகை ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதேபோல கலர் பிச்சிப்பூ ரூ.1,700, மெட்ராஸ் மல்லி ரூ.1,700, கனகாம்பரம் ரூ.2,500, முல்லைப்பூ ரூ.2 ஆயிரம், கோழிக்கொண்டை ரூ.60, செண்டுப்பூ ரூ.25, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.500, பட்டன் ரோஸ் ரூ.250, ரோஜா ரூ.150, அரளி ரூ.250 என விலை போனது. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 15 Feb 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  2. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  3. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  4. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  5. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  8. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  9. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா