பிப் 19 ல் கோட்டையை முற்றுகை- அரசு ஊழியர்கள் அறிவிப்பு

பிப் 19 ல் கோட்டையை முற்றுகை- அரசு ஊழியர்கள் அறிவிப்பு
X

நீண்ட நாட்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப் 19 ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மதுரையில் அறிவித்தது.

மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பு ஊதிய முறையை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 4 1/2 இலட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 19 ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும், தமிழக அரசு உடனடியாக அரசு ஊழியர்களை அழைத்து பேச வேண்டும், முற்றுகை போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள், ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழுவின் கூட்டம் திருச்சியில் கூடுகிறது. கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன, ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்தால் மட்டும் போதாது, நீண்ட நாட்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.

Tags

Next Story
ai job assessment