/* */

வீட்டு கதவை உடைத்து 150 பவுன் நகை, பணம் கொள்ளை

வீட்டு கதவை உடைத்து 150 பவுன் நகை, பணம் கொள்ளை
X

மதுரையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்து சுமார் 150 பவுன் நகை மற்றும் 6 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

மதுரை பைக்ரா இபி காலனி பகுதியில் முருகன் - காளிஸ்வரி தம்பதி குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். முருகன் வாடிப்பட்டி அருகே தனியார் டிராக்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். சம்பவத்தன்று மதியம் முருகனின் மனைவி காளிஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் கலைந்த நிலையில், இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்பு பீரோவில் வைத்திருந்த 150 பவுன் தங்கநகை 6 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

உடனே சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

Updated On: 5 Feb 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?