கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து குளிர வைத்த மழை

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து குளிர வைத்த மழை
X
மதுரையில் மழை

மதுரையில் இன்று மாலை மழை பெய்தது. கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பெய்த மழையால் சற்றே இதமான சூழல் நிலவு தொடங்கியுள்ளது.

கோடை வெயிலின் உச்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய அக்னி நட்சத்திரம் காரணமாக மதுரை வெப்பத்தால் தகித்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் திடீரென பெய்த மழை அரை மணி நேரம் பெய்தது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த இந்த திடீர் மழை காரணமாக கடும் வெப்ப சூழல் குறைந்து இதமான தட்பவெப்பம் நிலவியது.

Tags

Next Story
ai in future agriculture