டீ தயாரித்து மக்களுக்கு வழங்கி அசத்திய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

டீ தயாரித்து மக்களுக்கு வழங்கி அசத்திய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
X
டீக்கடையில் வாக்கு சேகரிக்கும் போது திடீரென்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் டீ தயாரித்து அங்குள்ள பொதுமக்களுக்கு வழங்கி அசத்தினார்

திருமங்கலம் தொகுதியில் உள்ள கரிசல்பட்டி, காமாட்சிபுரம், சமத்துவபுரம், மீனாட்சிபுரம், ராயபாளையம், ஆலம்பட்டி, இடையபட்டி, நாகையாபுரம் ,மதிப்பனூர், திரளி உள்ளிட்ட 40க்கு மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீவிர வாக்கு சேகரித்தார்

இதனை தொடர்ந்து சமத்துவபுரத்தில் உள்ள டீக்கடையில் வாக்கு சேகரிக்கும் போது திடீரென்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் டீ தயாரித்து அங்குள்ள பொதுமக்களுக்கு வழங்கி அசத்தினார்

அதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் அங்கிருந்த மக்களிடம் பேசியதாவது

கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி உள்ளேன்.

கொரோனா காலகட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக் கூட்டம் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து காய்கறி தொகுப்பு, அரிசி தொகுப்பு, கோதுமை தொகுப்பு, கபசுரக் குடிநீர், முக கவசம் ஆகியவற்றை நாங்கள் உங்களுக்கு வழங்கி தொடர்ந்து ஆறுதல் கூறி உங்களுடன் இருந்தோம்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நான்கு சுவற்றில் உட்கார்ந்துகொண்டு கண்ணுக்கு கூலிங் கிளாஸ், கை மற்றும் தலைக்கு உறை மாட்டிக் கொண்டு வீட்டைவிட்டு வெளிய வரவில்லை மேலும் மக்களைப் பற்றி அவர்கள் சிந்தித்தது கிடையாது. முதலமைச்சர் தனது உயிர் முக்கியமில்லை மக்களின் உயிர் தான் முக்கியம் என்று நினைத்தார் ஆனால் ஸ்டாலினோ தன் உயிர் மட்டும்தான் முக்கியம் என்று நினைத்தார்.

மக்களின் உணர்வுகளை உள்வாங்கி அதற்கேற்றவாறு திட்டங்களை முதலமைச்சர் தொடர்ந்து வழங்கி வருகிறார் தற்போது கூட தேர்தல் அறிக்கையில் 163 மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை அறிவித்து உள்ளார். அதில் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் ஆண்டிற்கு ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும்.

முதியோர் ஓய்வூதியத் திட்டம் திமுக ஆட்சியில் 500 ரூபாய் வழங்கப்பட்டது அதில் பயன் பெற்றவர்கள் 12 லட்சம் பேர் தான் ஆனால் அம்மா அவர்கள் முதியோர் ஓய்வு தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார்கள் தற்போது 35 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது தற்போது தேர்தல் அறிக்கையில் 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். திட்டங்களையெல்லாம் எல்லாம் நீங்கள் நாடி செல்ல வேண்டாம் உங்கள் இல்லம் தேடி வாசலில் பெல் அடித்து உங்களுக்கு வழங்கப்படும்.

எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லை நிலை உருவாக வேண்டும் என்ற அம்மாவின் இலட்சிய நோக்கத்திற்கு ஏற்ப, இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் எல்லா வளமும் பெறவேண்டுமென்று திட்டங்களை முதலமைச்சர் உங்களுக்கு வழங்கி வருகிறார்.

ஆகவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் அரியணையில் அமரும் வண்ணம் இந்த திருமங்கலம் தொகுதி முதல் வெற்றியை பெற்றுத் தந்த தொகுதி என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்கிடும் வகையில் இரட்டை இலைக்கு வாக்கு அளித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன் மற்றும் சுகுமார் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story