/* */

மகாத்மா காந்தி சிலையை மூடியிருந்த துணி அகற்றம்

மகாத்மா காந்தி சிலையை மூடியிருந்த துணி அகற்றம்
X

மதுரையில் தேர்தல் நடத்தை விதியை தொடர்ந்து மகாத்மா காந்தியின் சிலை மூடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து மறைக்கபட்ட துணி அகற்றப்பட்டது.

தமிழக சட்டமன்றத் பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாநகராட்சி ஊழியர்கள் துணியால் மூடி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோர் சிலைகள் துணி கொண்டு மூடப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக மதுரை யானைக்கல் சந்திப்பில் உள்ள தேசபிதா என்றழைக்கப்படும் மார்பளவு கொண்ட காந்தியின் சிலையும் வெள்ளைத் துணி கொண்டு மூடப்பட்டிருந்தது காந்தி ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதற்கு கடும் கண்டனங்களும் எழுந்தது. இந்நிலையில் மகாத்மா காந்தி சிலையில் சுற்றப்பட்டிருந்த துணி மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது.

Updated On: 12 March 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?