சாலையில் அடிபட்ட நாய்க்கு சிறப்பு சிகிச்சை

சாலையில் அடிபட்ட நாய்க்கு  சிறப்பு சிகிச்சை
X
சாலையில் அடிபட்டு கிடந்த செல்லப் பிராணிக்கு மதுரையில் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை செல்லப் பிராணியான நாய் ஒன்று வாகனத்தில் அடிபட்டு கிடந்தது. இது குறித்து அப்பகுதியில் இருந்த செய்தியாளர்கள் கால்நடை பராமரிப்புத் துறை மதுரை மண்டல இயக்குநர் Dr.ராஜதிலகன் அவர்களுக்கு தெரிவித்தனர். உடனடியாக அவர் உத்தரவின்படி கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு விலங்குகள் நல ஆர்வலர்களான மும்தாஜ் மற்றம் மயூர் ஆகியோர் உதவியுடன் தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பாதிப்பின் தன்மை அறிந்து உடனடி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த நாய் நலமுடன் உள்ளது. பன்முக மருத்துவ மனையின் பிரதம மருத்துவர் வைரவசாமி தலைமையில் கால்நடை உதவி மருந்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சிகிச்சை பணி மேற்கொண்டார்கள்.

Next Story