துர்நாற்றம் வீசும் ஊரணி: பொதுமக்கள் வேதனை

துர்நாற்றம் வீசும் ஊரணி: பொதுமக்கள் வேதனை
X
மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள ஊரணியில் ஆகாயத்தாமரை வளர்ந்தும், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசும் அவலநிலையிலும் உள்ளது. இது நோய் பரப்பும் இடமாக மாறிவிடுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

மதுரை பழங்காநத்தம் பகுதில் உள்ள ராமர் கோவில் தெரு அருகே அமைந்துள்ள ஊரணியில், ஆகாயத்தாமரை முழுவதுமாக வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதில் கழிவுநீர் கலப்பதால், ஊரணி கரையிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க வேண்டும், ஆகாயத்தாமரையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஊரணிக் கரையை சரி செய்து, மேம்படுத்தி குடிநீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர் .

இது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதி என்பதால், இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அவரிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.

Tags

Next Story