தலித் ஆயர்களை நியமிக்க கோரிக்கை

தலித் ஆயர்களை நியமிக்க வலியுறுத்தி மதுரை பேராயர் பாபு அந்தோணிசாமி யிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
தமிழ்நாடு கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் நியமனத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப் படுவதை உடனடியாக நிறுத்தி, விகிதாச்சார அடிப்படையில் தலித் ஆயர்களை நியமிக்க வேண்டும், என வலியுறுத்தி இன்று மதுரை நீதிமன்றம் அருகில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. போலீசார் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு தெரிவித்தனர்.
தலித் ஆயர்கள் நியமன கோரிக்கைக்கான பிரச்சார ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் தலைமையில், பிரச்சார வழக்கறிஞர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இன்று புதூரில் உள்ள பேராயர் இல்லத்திற்கு சென்று, பேராயர் பாபு அந்தோணிசாமியிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். தமிழ்நாட்டிலுள்ள 8 மாவட்டங்களில் தஞ்சாவூர் கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் காலியாய் இருக்கின்ற இடங்களில் தலித் ஆயர்கள் மற்றும் பேராயர்கள் மட்டுமே நியமிக்கவேண்டும். கடந்த 14 ஆண்டுகளில் ஒருவர் கூட தலித் கிறிஸ்தவ சமூகத்தில் இருந்து ஆயர்களாகவோ, பேராயர்களாகவோ தேர்வு செய்யவில்லை. ஆனால் இதே 14 ஆண்டுகளில் 10 ஆயர்கள், பேராயர்கள் நியமனம் நடந்துள்ளது. இதில் ஒருவர் கூட தலித் கிறிஸ்தவ சமூகத்தை சார்ந்தவர் இல்லை.
பொருளாதார வளர்ச்சியில் தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu