Begin typing your search above and press return to search.
அஞ்சல் தேர்வில் தமிழை மத்தியஅரசு சேர்க்கும் எல்.முருகன்
அஞ்சல்துறை தேர்வில் தமிழை மத்தியஅரசு கட்டாயம் சேர்க்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. அதற்கான பிரச்சாரங்களை ஏற்கனவே அரசியல் கட்சிகள் துவக்கி விட்டது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறுகையில், தேர்தலில் போட்டியிட அதிக தொகுதிகள் கேட்டு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். அவர் பா.ஜ.க வுக்கு ஆதரவு தந்தால் வரவேற்போம் என்றார். மேலும் அஞ்சல்துறை தேர்வில் தமிழை மத்திய அரசு கட்டாயம் சேர்க்கும், எனக் கூறினார்.