மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்

X
By - Needhirajan, Reporter |5 Jan 2021 2:30 PM IST
மதுரையில் இன்று காலை எஸ்.டி.பி.ஐ கட்சி ஸ்டேட் வங்கி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சை முண்டாசு கட்டி, நெல் நாற்று கரும்புகளுடன் பங்கேற்றனர்.
புதிய வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டம் சார்பில் இன்று காலை மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது துணை தலைவர்கள் சீமான், சுப்பிரமணியன், செயலாளர் சிக்கந்தர் ,வர்த்தக அணி தலைவர் லத்தீப், தொகுதி நிர்வாகிகள் தாஜுதீன் பிலால் தீன் அபுதாகிர் ஆகியோர் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu