பொங்கல் பண்டிகை கழித்தும் பொங்கல் பரிசை வாங்கலாம் -அமைச்சர் செல்லூர் கே.ராஜு

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் மதுரை மாநகராட்சி தூய்மை பணிக்கு 55 இலட்சம் மதிப்பில் 200 மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில் "தமிழகத்தில் கொரைனா 2 ஆம் அலை வருகிறது என தகவல், கொரைனா 2 ஆம் அலையில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொங்கல் பரிசு தமிழ்நாடு முழுதும் 4 ஆம் தேதி வழங்கப்படுகிறது, தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பொங்கல் பரிசு வழங்கப்படும். பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகை கழித்தும் பொங்கல் பரிசை வாங்கலாம். 2 கோடியே 6 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
திமுகவில் உழைத்து பயன் அடையாதவர்களை மு.க.அழகிரி அழைத்து உள்ளார், ஊடகத்தில் செய்தி வர வேண்டும் என்பதற்க்காக திமுக தலைவர் நாள்தோறும் பேசி வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத அளவிற்கு அதிமுக சாதனை படைத்துள்ளது. முதல்வருக்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். மக்கள் சினிமா நடிகரை போல முதல்வரை பார்த்து வருகிறார்கள். கூட்டணி கட்சியினர் இடையே எந்தவொரு விவாதமும் இல்லை. தேர்தல் அறிவித்த பின்னர் கூட்டணி கட்சியை அழைத்து பேசுவோம். திமுக கிராம சபை கூட்டத்திற்கு 200 அல்லது 300 ரூபாய் கொடுத்து மக்களை அழைத்து வருகிறார்கள். திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழகத்தை ஆளும், வரும் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்" என கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu