இந்தியத் துணைக்கண்டத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஓரே அரசு திமுக மட்டும் தான் -எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

இந்தியத் துணைக்கண்டத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஓரே அரசு திமுக மட்டும் தான்   -எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா
X
இந்தியத் துணைக்கண்டத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஓரே அரசு திமுக மட்டும் தான் என மதுரையில் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டினார்.

மதுரை அனுப்பானடி பகுதியில் அம்மா மினி கிளிக்கை அதிமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார், இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிமுக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்,

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறியதாவது :

அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது, மினி கிளினிக் மக்களுடைய வரவேற்பை இது பெற்றுள்ளது.மேலும் அதிகப்படியான மருத்துவமனைகளை திறப்பதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து உரிய சட்ட திட்டங்களும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு விதிமுறையை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மக்களுடைய மனநிலையை புரிந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக முதல்வர் மக்களை சந்தித்து வருகிறார் மக்களை சந்திக்கிற மக்கள் தலைவராக முதல்வர் உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் பரிசுத்தொகை அறிவித்த பின்பு தோல்வி பயத்தின் காரணமாக அதிமுக அமைச்சர்கள் மீது ஆதாரமில்லாமல் ஆளுநரை சந்தித்து திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.எங்கள் மீது குற்றம் இருந்தால் மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள். திமுக காலத்தில் செய்த மிகப்பெரிய தவறுகள் இன்னும் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

இந்திய துணைக்கண்டத்தில் ஊழல் ஊழல் குற்றச்சாட்டுக்காகவும் வன்முறைக்கும் கலைக்கப்பட்ட அரசு திமுக. திமுகவினர் அதிமுக அமைச்சர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எடுபடாது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என இளைஞர் கள் விரும்புகிறார்கள்.உரிய வழிகாட்டுதலின் பேரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். கிராம சபை கூட்டம் என்பது ஊராட்சி தலைவர், ஆட்சியர்,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தான் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெறும்.

ஆனால், திமுகவினர் அதன் கட்சிக்காரர்கள் நான்கு பேர் சேர்ந்து கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகின்றனர். அதிமுகவை நிராகரிக்கிறோம் என கிராம சபை கூட்டத்தில் சொல்வது எந்த ஒரு காரணமும் இல்லை. அதிமுக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல தியாகத்தால் உருவான கட்சி. வேண்டாம் வேண்டாம் திமுக வேண்டாம் என்ற குரல் தான் தமிழகத்தில் ஒலித்து வருகிறது. இவ்வாறு தனது பேட்டியின் பொது தெரிவித்தார்.

Next Story