மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர்கள் முதல்வரை சந்தித்தனர்

மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர்கள் முதல்வரை சந்தித்தனர்
X
கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பிற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நன்றி தெரிவித்து, கோரிக்கை மனு அளித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தையொட்டி, மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர்கள் பச்சையம்மாள், சி.கோபி ஆகியோர் மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் சந்தித்து, கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பிற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நன்றி தெரிவித்து, கோரிக்கை மனு அளித்தார்கள். உடன் சிறகுகள் விரிய கூட்டமைப்பின் அமைப்பாளர் தேவநேயன், சமூக செயற்பாட்டாளர்கள் குறளமுதன், பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare