/* */

குற்றச் செயல்களை தடுக்க ஒலிபெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு

குற்றச் செயல்களை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

குற்றச் செயல்களை தடுக்க ஒலிபெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு
X

 ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய அனைத்து உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் குற்றத்தடுப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரியும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை குறித்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டைப் பூட்டி சாவியை மறைத்து வைப்பதாக நினைத்து ஏமாற வேண்டாம் எனவும்,முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து எதையும் வாங்கி சாப்பிடக் கூடாது.

எனவும் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அடையாளம் தெரியாத நபர்கள் வந்து பேச முற்பட்டாள் அவர்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் கொடுக்காமல் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கவனத்தை திசை திருப்பி நகை பறிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள்.

தங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்து மாறு அறிவுறுத்தப்பட்டது, வெளியூர் செல்லும்போது காவல் நிலையத்தில் தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தி குற்றத்தடுப்பு சம்மந்தமாக ஒலிபெருக்கி மூலம் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 16 Oct 2021 5:10 PM GMT

Related News