/* */

பத்தலபள்ளி காய்கறி மார்க்கெட் பகுதியில் மதுபானம் விற்றவர் கைது

பத்தலபள்ளி காய்கறி மார்க்கெட் பகுதியில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

பத்தலபள்ளி காய்கறி மார்க்கெட் பகுதியில் மதுபானம் விற்றவர் கைது
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்தலபள்ளி காய்கறி மார்க்கெட் பகுதியில் வெளிமாநில மதுபானம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அட்கோ போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Updated On: 20 Oct 2021 5:15 PM GMT

Related News