விதிமுறை மீறல்.. பட்டாசுக்கடை உரிமம் ரத்து..!

விதிமுறை மீறல்.. பட்டாசுக்கடை உரிமம் ரத்து..!
விதிமுறை மீறல்.. பட்டாசுக்கடை உரிமம் ரத்து..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தற்காலிக உரிமம் வழங்குதல், பாதுகாப்பான பட்டாசு விற்பனை மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நமது மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த குழுவில் இணையுங்கள். கொங்கு மண்டல செய்திகள் நொடிக்கு நொடி.

முக்கிய அறிவிப்புகள்

விண்ணப்ப காலக்கெடு: அக்டோபர் 31, 2023

விண்ணப்ப முறை: இணையதளம் அல்லது மக்கள் கணினி மையம் வழியாக

தேவையான ஆவணங்கள்: ஊராட்சி வரி ரசீது, இட வரைபடம், கட்டிட வரி ரசீது, வாடகை ஒப்பந்தம் (தேவைப்பட்டால்), உரிமக் கட்டணம் ₹500 செலுத்திய சலான்

பாதுகாப்பு விதிமுறைகள்

கட்டிடம் கல் மற்றும் தார்சு கொண்டதாக இருக்க வேண்டும்

கடைகளுக்கிடையே 3 மீட்டர் இடைவெளி

குடியிருப்புகள் அருகில் இருக்கக்கூடாது

எண்ணெய் விளக்கு, எரிவாயு விளக்கு, மெழுகுவர்த்தி தடை

மின்சார பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது

2 தீயணைப்புக் கருவிகள், 2 தண்ணீர் வாளிகள், 2 மணல் வாளிகள் தயாராக இருக்க வேண்டும்

எச்சரிக்கை

விதிமுறைகளை மீறும் உரிமையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு கடை உரிமையாளர்கள் இவற்றை கவனமாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story