/* */

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழியை ஆட்சியர் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு
X

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பதையொட்டி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் (Vigilance Awareness Week) அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை அனைத்து அரசு அலுவலகங்களில் கடைபிடிப்பதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழியை அனைத்து அரசு துறை அலுவலர்கள் இன்று (30.10.2023) எடுத்துக்கொண்டனர்.

இந்த ஆண்டின் கண்காணிப்பு விழிப்புணர்வு வார அரசின் கருப்பொருளாக "Say no to Corruption; Commit to the Nation” என்ற நோக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதி மொழி:

நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.

அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்

எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்,

• இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்,

• அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும்,

•பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும்,

• தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றும்,

ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் டி.ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) பி.ராஜகோபால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை நல அலுவலர் கே.விஜயலட்சுமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Oct 2023 11:07 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    கோழித்தீவனத்திற்கு ரேஷன் அரிசியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை -...
  2. லைஃப்ஸ்டைல்
    கடுமையான வெப்பம் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது? தற்காத்துக் கொள்வது...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
  4. நாமக்கல்
    மோகனூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர் திருவிழா: திரளான...
  5. காஞ்சிபுரம்
    நடிகர் விஜய்க்கு எப்போதும் எங்களின் ஆசி உண்டு: எஸ்.ஏ.சந்திரசேகர்
  6. இந்தியா
    கார் கழுவுவதற்கு தடை! தண்ணீரை வீணாக்கினால் அபராதம்: டெல்லி அரசு
  7. உலகம்
    மற்றொரு கோவிட் போன்ற அச்சுறுத்தல்? மூன்று நாட்களில் கொல்லக்கூடிய...
  8. வீடியோ
    வரபோற தேர்தல்ல ஜெயிச்சு சாதனை பண்ணா அவர் சொன்ன கருத்து உண்மைதான்...
  9. ஈரோடு
    ஈரோட்டில் கால்பந்து விளையாடிய வீரர் மயங்கி விழுந்து திடீர் உயிரிழப்பு
  10. வீடியோ
    கூடியவிரைவில் அதிமுகவில் கலகம் வெடிக்கும் | கொளுத்திப் போட்ட நிர்வாகி...