/* */

பி.எம்.கிசான் உதவித்தொகை பெற ஆதார் எண் பதிவு கட்டாயம் : கரூர் வேளாண் உதவி இயக்குனர்

விவசாயிகள் தவணைத்தொகையை பெற பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

பி.எம்.கிசான் உதவித்தொகை பெற  ஆதார் எண் பதிவு கட்டாயம் : கரூர் வேளாண் உதவி இயக்குனர்
X

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில், 13-வது தவணையாக, அதாவது 2022, டிசம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத்தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து கரூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்ததாவது: பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதிசெய்து கொள்ளலாம்.

அதன்படி பொது சேவை மையத்திற்கு சென்று, தனது பெயரை பி.எம்.கிசான் இணைய தளத்தில் இ-கே.ஒய்.சி. செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபியை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம்.

அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளவும் என கூறியுள்ளார்.

Updated On: 30 Nov 2022 8:06 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை