/* */

டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு ரூ. 50 ஆயிரம் மதுபானம் திருட்டு

கரூரில் அரசு மதுபானக் கடையின் சுவற்றை துளையிட்டு 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மரம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து மாயனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சமத்துவபுரம் அருகே அரசு டாஸ்மார்க் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் நேற்று வியாபாரம் செய்து விட்டு சூப்பர் வைசர் சுரேஷ்குமார் மற்றும் பணியாளர்களுடன் கணக்கு பார்த்து வியாபாரம் செய்த பணத்தை எடுத்து கொண்டு இரவு 7.00 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்கள்.

இன்று காலை கடையை திறந்து பார்த்தபோது, கடையின் பின் சுவர் துளையிடப்பட்டு இருந்தது. மேலும், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில் பெட்டிகளும் சில திருடு போயிருந்தன. அதிர்ச்சியடைந்த சூப்பர்வைசர் சுரேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மாயனூர் காவல் நிலையப் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

மேலும், உடனடியாக கடையில் இருப்பை கணக்கெடுத்தனர். சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானம் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சுமாா 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை மட்டும் திருடு போனது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து மாயனூர் காவல் நிலையப் போலீசார் திருடு போன கடை சூப்பர்வைசர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 May 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க