/* */

கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகை கொள்ளை

கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

HIGHLIGHTS

கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகை கொள்ளை
X

கரூரில் 58 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட உணவு விடுதி உரிமையாளர் வீடு.

கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 58 சவரன் தங்க நகைகளையும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் அருகே புலியூர் ஏ பி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் புலியூர் சிமெண்ட் ஆலை முன்பு உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இன்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, மகன், மற்றும் மகளுடன் உணவு விடுதிக்கு சென்றார். மாலையில் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கே படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. மேலும் வீட்டில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Jun 2021 5:43 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  3. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  6. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  7. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  8. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  9. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  10. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்