5 வது நாளாக தடுப்பூசி இல்லை; பொதுமக்கள் ஏமாற்றம்

கரூரில் தடுப்பூசி செலுத்தும் மையத்தில் தடுப்பூசி இருப்பு இல்லாததல் திரும்பி செல்லும் நபர்.
கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி மையம் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி மையமாக செயல்பட்டு வரும் நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் தடுப்பூசி இல்லாத காரணத்தால் அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக வரும் பொதுமக்கள் அதனைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை 2,45,000 நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில், நேற்று புனேவிலிருந்து 8லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் விமானத்தில் சென்னை வந்துள்ளது. சுகாதாரத்துறை இதனை மாவட்ட வாரியாக பகிர்ந்தளித்து வருகிறது. இதனையடுத்து, இன்று பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu