/* */

கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை:  அமைச்சர் செந்தில்பாலாஜி
X

கரூரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது இல்லை. இருந்தாலும் வாய்ப்பு உள்ள தனியார் ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்க எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்

கரூரில், கொரோனா சிறப்பு நிதி உதவி முதல் தவணையாக ரூ 2 ஆயிரம் வழங்கும் பணியை துவக்கி வைத்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேட்டி:

கரூர் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தற்போது இல்லை. இருப்பினும், கூடுதலாக ஆக்சிசன் உற்பத்தியை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு காகித ஆலை வளாகத்தில் 250 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் உபகரணங்கள் வெளிநாட்டில் இருந்து வருவதால் அதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல கரூர் மாவட்டத்தில் வாய்ப்பு உள்ள தனியார் ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான ஆலோசனை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் அழைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, கொரோனா காலம் என்பதால் மக்களை பாதுகாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்பிறகு மாதாந்திர மின் கட்டண நடவடிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்வார்.

Updated On: 15 May 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...