/* */

மத்திய அரசு விருதுக்கு கரூர் ஆசிரியர் தேர்வு

கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோகரன் தேசிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

மத்திய அரசு விருதுக்கு கரூர் ஆசிரியர் தேர்வு
X

தேசிய விருதுக்கு தேர்வான கரூர் ஆசிரியர் மனோகரன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுவதாக.மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோகரனும் தேசிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் ஆற்றலை மேம்படுத்தி வரும் ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த வகையில் 2018ம் ஆண்டிற்கு மூன்று ஆசிரியர்களும், 2019ம் ஆண்டிற்கு மூன்று ஆசிரியர்களும் என ஆறு ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளது.

இதில், கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோகர், 2018ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர், தனது பள்ளியில் மாணவர்களுக்கு QR Code குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து வழங்கியுள்ளார். மாணவர்கள் வீட்டில் மொபைல் போனில் அடையாள அட்டையில் உள்ள QR Codeஐ ஸ்கேன் செய்தால் மாணவர்களின் வருகைப் பதிவேடு, பள்ளி அளவில் நடக்கும் தேர்வுகளின் மதிப்பெண்கள், தினமும் வீட்டுப்பாடம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள முடியும். இந்த வகையில், மாணவர்களை கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்தது உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு தொழில் நுட்பப் பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

தேசிய விருதுக்கு தேர்வான ஆசிரியர் மனோகரனை கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.


Updated On: 1 July 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...