/* */

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது: விவசாயிகள் மிகழ்ச்சி

தமிழக முதல்வர் மேட்டூரில் கடந்த 12ம் தேதி திறந்து விட்ட தண்ணீர் கரூரை வந்தடைந்தது. இதனைக் கண்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது: விவசாயிகள் மிகழ்ச்சி
X

மேட்டூ்ர் அணையில் திறக்கப்பட்ட காவிரிநீர் கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணையை வந்தடைந்தது.

டெல்டா மாவட்ட குறுவை பாசனத்துக்கா காவிரியாற்றில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்த்து. . விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் 10 ஆயிரம் கன அடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

அந்த தண்ணீரானது சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை கடந்து இன்று கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது.

பண்பகல் 12 மணியளவில் விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது டெல்டா மாவட்டங்களை நோக்கி சென்று கொண்டுள்ளது. திருச்சி மாவட்டம் முகொம்புக்கு நாளை அதிகாலை சென்றடையும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகல் 12 மணி நிலவரப்படி சுமார் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளதாகவும், மாலைக்குள் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 14 Jun 2021 9:49 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?