/* */

ஒரே இரவில் இருவேறு இடங்களில், 11 லட்சம் பறிமுதல் செய்தது பறக்கும்படை

கரூர் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 11 லட்சம் ரூபாய் பறிமுதல் .

HIGHLIGHTS

கிருஷ்ணராயபுரம் தொகுதி பறக்கும்படை அலுவலர் கே.சூர்யா தலைமையில் தரகம்பட்டி சாலையில் குஜிலியம்பாறை பிரிவு என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கருங்குளத்தை சேர்ந்த கோமல் சாலமோன் ராஜா மற்றும் 2 நபர்கள் காரில் வந்தனர். அந்த காரை சோதனையிட்டபோது அதில் ரூபாய் 7,61,000 உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. மேற்படி தொகை பறிமுதல் செய்யப்பட்டு, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது

இதேபோல, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் பள்ளபாளையம் பிரிவு பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் காரை சோதனையிட்டனர். அப்போது அதில், 3,65,500 உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் . உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 11 லட்சம் ரூபாய் ஒரே இரவில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 31 March 2021 4:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...