/* */

கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டை: போலீசார் விசாரணை

கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி சேவல் சண்டை நடத்திய கும்பலில் ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டை: போலீசார் விசாரணை
X

சேவல் சண்டை நடைபெற்ற இடத்தில் பொருட்களை பறிமுதல் செய்யும் போலீசார் 

கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள பேருந்து டெப்போ அருகே திமுக நிர்வாகிகளான கோல்டு ஸ்பாட் ராஜா, தம்பி சுதாகர் ஆகியோருக்கு சொந்தமான பிளக்ஸ் வேஸ்ட் கழிவுகள் கொட்டுவதற்காக குடோன் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த குடோன் அருகில் இன்று அனுமதியின்றி சேவல்கட்டு நடைபெற்று வந்த நிலையில், இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில், அங்கிருந்த ராமானுஜம் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்து ஒரு இறந்த சேவல் மற்றும் சேவல் காலில் கட்டப்படும் கத்திகள் மற்றும் 10 இருசக்கர வாகனத்தை பசுபதிபாளையம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு