/* */

மினி லாரி மோதியதில் இரு மூதாட்டிகள் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே மினி லாரி மோதியதில் பேருந்திற்காக காத்திருந்த 2 மூதாட்டிகள் பலத்த காயமுற்று உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

மினி லாரி மோதியதில் இரு மூதாட்டிகள் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான மினி லாரி.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கொடையூரை சேர்ந்த பெரியம்மாள் (70) மற்றும் ஆறு ரோடு பகுதியை சேர்ந்த லட்சுமி (65) ஆகிய இருவரும் ஆறு ரோடு தனியார் மண்டபம் எதிரில் கரூர் உழவர் சந்தை செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது திண்டுக்கல்லிருந்து கரூர் நோக்கி வந்த மீன் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனம் நிலைதடுமாறி மோதியது. இதில் இருவரும் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நிலை தடுமாறி வந்த மினி லாரி சாலையின் இடது ஓரத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 Nov 2021 6:00 PM GMT

Related News