/* */

லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி

தென்னிலை அருகே லாரியும் காரும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி
X

லாரியும்,  காரும் மோதிக் கொண்டதில் உயிரிழந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி.

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (38 ). அவரது மனைவி ரேவதி ( 31). கோவை மாவட்டம் பல்லடம் தெற்குபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் இலக்கியா( 29). இவர்கள் கார்த்தியின் சித்தப்பாவின் இறப்புக்கு கரூருக்கு வந்துவிட்டு பிறகு கார்த்தி வேலை பார்க்கும் ஊத்துக்குளி பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கார், கரூர் கோவை சாலையில் தென்னிலை அருகே வானவிழி என்ற இடத்தில் சென்றபோது காரும், எதிரே வந்த காய்கறி ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி ரேவதியும், இலக்கியாவும் காயமுற்றனர். இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு கரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கே.பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  4. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  5. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  10. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு