தமிழ் தாத்தாவுக்கு நினைவஞ்சலி
![தமிழ் தாத்தாவுக்கு நினைவஞ்சலி தமிழ் தாத்தாவுக்கு நினைவஞ்சலி](https://www.nativenews.in/h-upload/2021/04/28/1034502-img-20210428-wa0009.webp)
By - C.A.Kumar, Reporter |28 April 2021 1:30 PM GMT
கரூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் தாத்தா உ வே சா வுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது
சங்க இலக்கியங்களை மீட்டெடுத்த தமிழ் தாத்தா உ.வே. சாமிதாய்யர் நினைவு தினம் இன்று தமிழ் ஆர்வலர்களால் அனுசரிக்கப்பட்டது.. இதையொட்டி. கரூரில் உள்ள பரணி பார்க் மெட்ரிக் பள்ளியில் உ.வே சா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பள்ளி, முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் தலைமையில். ஆசிரியர்கள் அலுவலர்கள். "தமிழி" எழுத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களின் கையெழுத்து பிரதிகளை படையல் இட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இவ்வுலகம் இருக்கும் வரை சங்க இலக்கியங்களின் பெருமையும் தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களின் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும் என புகழஞ்சலி செலுத்தினர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu