/* */

கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் திடீர் தீ விபத்து

கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் திடீர் தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

HIGHLIGHTS

கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் திடீர் தீ  விபத்து
X

கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புகளூர் வட்டம், புகளூர் பகுதியில் ஈ.ஐ.டி பாரி நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலையின் குடோனில் ஒரு பகுதியாக அகர்பத்தியின் உற்பத்திக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் பவுடர் தயாரிக்கப்படுகிறது.

இந்த அகர்பத்திக்காக பவுடர் தயாரிக்கும் பொருட்கள் தயார் செய்யும் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீயினால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, இந்த தீயானது, சுமார் 30 நிமிடம் எரிந்த நிலையில், இந்த தகவல் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கும், தமிழ்நாடு காகித ஆலைக்கு சொந்தமான தீயணைப்பு துறைக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரு தீயணைப்பு வாகனங்களும் மொத்தமாக இணைந்து கூட்டுமுயற்சியால் தீயை முற்றிலும் கட்டுப்படுத்தி பெருமளவில் தீ சேதத்தினை பெருமளவில் தவிர்த்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில், உயிர்சேதம் ஏதும் இல்லை என்றும், தீயினால் முற்றிலும் எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் வரும் என்றும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயந்திரத்தில் இயங்கும் கன்வையர் பெல்ட் என்ற பெல்ட்டில் உள்ள ஐ டீலரில் ஏற்பட்ட திடீர் தீயால் தான் இந்த விபத்து நடந்திருக்க கூடும் என தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 25 Jan 2022 5:17 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...