ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் மாயம்

ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் மாயம்

கரூரில் காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கிய கல்லூரி மாணவர்

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளித்த கேட்டரிங் மாணவன் நீரில் மூழ்கி மாயமானார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழனியப்பா ஆயில் மில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அரவிந்தன் (17). இவர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவரது சித்தப்பா விவேக் ( 30), அரவிந்தனின் மாமன் மகன் கௌதம் (17 )ஆகிய 3 பேரும் பரமத்தி வேலூர் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக வந்துள்ளனர். காவிரி ஆற்றுப் பாலத்தின் அடியில் காரை நிறுத்திவிட்டு மூன்று பேரும் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அரவிந்தன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தார். பின்னர் அரவிந்தனை பார்த்தபோது காணவில்லை. நீண்ட நேரம் தேடிப் பார்த்தோம் கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து அரவிந்தனின் சித்தப்பா விவேக் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றுப் பகுதிக்கு விரைந்து வந்து பிளாஸ்டிக் படகு மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர். இரவு நேரமானதால் தேடுதல் முயற்சி நிறுத்தப்பட்டது. மீண்டும் நாளை காலை தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மூழ்கிய மாணவன் உடலை தேட உள்ளனர்.

Next Story