கலப்பட டீசல் 1,000 லிட்டருடன் டேங்கர் லாரி பறிமுதல்: ஒருவர் கைது
![கலப்பட டீசல் 1,000 லிட்டருடன் டேங்கர் லாரி பறிமுதல்: ஒருவர் கைது கலப்பட டீசல் 1,000 லிட்டருடன் டேங்கர் லாரி பறிமுதல்: ஒருவர் கைது](https://www.nativenews.in/h-upload/2021/09/20/1307577-screenshot20210920114619.webp)
கைது செய்யப்பட ஆகாஷ்.
By - C.A.Kumar, Reporter |20 Sep 2021 4:00 PM GMT
கலப்பட டீசல் விற்க முயன்றவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர்.
கரூரில் கலப்பட டீசல் விற்கப்படுவதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தாராபுரம் சாலையில் உள்ள காசிபாளையம் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்றில் 1000 லிட்டர் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த லாரியில் இருந்த கலப்பட டீசலை விற்க முயன்ற ஆகாஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 1000 லிட்டர் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu