/* */

கரூரில் எரிபொருள் விலை உயர்வு : சிலிண்டர், வாகனத்துக்கு மாலை அணிவித்து கண்டனம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து டூவீலர், எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

கரூரில்  எரிபொருள் விலை உயர்வு :  சிலிண்டர், வாகனத்துக்கு மாலை அணிவித்து கண்டனம்
X

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மாலை அணிவித்து போராட்டம்.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல்வேறு அமைப்பினரும் தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் அடுத்த ராயனூர் பேருந்து நிறுத்தம் முன்பாக கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், அதிகரித்து வரும் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் எனவும், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்படுவதாக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது இருசக்கர வாகனம் மற்றும் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 11 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்