/* */

கரூரில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் கைது.

HIGHLIGHTS

கரூரில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
X

கைது செய்யப்பட குமரவேல்.

கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது மனைவி செந்தில் ராணி பெயரில் பரமத்தி பகுதியில் 4 வீட்டு மனைகளை வாங்கி இருந்தார். அந்த வீட்டு மனைகளை வரைமுறை படுத்துவதற்காக, க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேலிடம் விண்ணப்பித்தார். மனை வரைமுறைப்படுத்துவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சக்திவேல் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் நேற்று க. பரத்தி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்ற சக்திவேல் அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேலிடம் ரூ 25 ஆயிரம் பணத்தை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குமரவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Updated On: 24 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?