/* */

கரூரை குளிர்வித்த மழை... சூரியனின் சூடு தணிந்தது!

கரூர் மாவட்டத்தில் இன்று பரவலாக பெய்த மழையால், கடும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பநிலை நிலவியது. கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதி தமிழக அளவில் அதிக வெப்பநிலை நிலவும் பகுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த பகுதியில் அதிக அளவில் கல்குவாரிகள் உள்ளதால், பூமியிலிருந்து வெப்ப அதிக அளவில் வெளியேறி உயர்ந்த பட்ச வெப்பநிலை நிலவியது.

கரூர் மாவட்டம் முழுவதும் நிலவிய கோடை வெப்பத்தால், குழந்தைகள், வயதானவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர் மதிய வேளையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கோடை வெப்பத்தை தணிக்க மழை பெய்யாதா என்று பலரும் ஏங்கிக் கிடந்தனர்.

இந்நிலையில், இன்று காலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன; சற்று நேரத்தில் மழை பொழிய ஆரம்பித்தது கரூர் நகரம், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.

இதனால் கடந்த சில தினங்களாக நிலவிவந்த வெப்பமான சூழ்நிலை குறைந்து, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

Updated On: 27 April 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க