கிணற்றுக்குள் தவறி விழுந்த செம்மறி ஆடு; தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு

X
பைல் படம்.
By - C.A.Kumar, Reporter |11 Aug 2021 10:48 PM IST
வேலாயுதம்பாளையம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த செம்மறி ஆட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
வேலாயுதம்பாளையம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த செம்மறி ஆட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கரூர் அரவக்குறிச்சியை அடுத்த புன்னம் பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் தனது செம்மறி ஆடுகளை அருகாமையில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்த்து கொண்டிருந்தார். அங்கிருந்த கிணற்றில் ஒரு செம்மறி ஆடு தவறி விழுந்தது. அதை மீட்க முடியாததால் இது குறித்து சுப்பிரமணியன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் இறங்கி செம்மறி ஆட்டை உயிருடன் மீட்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu