நங்காஞ்சி ஆற்றங்கரையார மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நங்காஞ்சி ஆற்றங்கரையார மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நங்காஞ்சி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு உப கோட்ட உதவி செயற் பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள பரப்பலாறு அணையின் நீர்மட்டம் இன்று ( 07 .11.2021) மாலை 4:30 மணியளவில் 87 அடியாக உயர்ந்துள்ளது.அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே நங்காஞ்சியாறு ஆற்றங்கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் , பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story