தேர்தல் நடத்தை எதிரொலி 37,50,000 பறிமுதல்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வைரமடை என்ற இடத்தில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையில் 37,50,000 ரூபாய் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப எடுத்துச் சென்றதாக அந்த வாகனத்தில் இருந்தவர்கள் கூறினர். ஆனால் அந்த பணத்தை எடுத்துச் செல்வதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
உரிய விசாரணைக்கு பிறகு அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்ப சென்ற வாகன ஓட்டுநர் கோபால் மற்றும் பணம் நிரப்பும் அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வாகனத்திற்கு பாதுகாவலராக வந்த காவலர் முனியப்பன் ஆகியோரிடம் தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu