/* */

கிணற்றில் மூழ்கி பள்ளி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கரூர் அருகே வாங்கலில் கிணற்றுக்குள் தவறி விழுந்து 2 சிறுவர்கள் இறந்தனர்.

HIGHLIGHTS

கிணற்றில் மூழ்கி பள்ளி  2 சிறுவர்கள் உயிரிழப்பு
X

கிணற்றில் இருந்து மீட்கப்படும் சிறுவர்களின் உடல்கள்.

கரூர் அருகே 5 ம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்கள் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியல் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டம் வாங்கல் அருகேயுள்ள என். புதூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது உறவினர் சக்திவேல் இருவரும் அந்த பகுதியில் உள்ள சாயப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். கோவிந்தராஜன் மகன் தங்கதுரை, சக்திவேல் மகன் சுஜித் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து சிறுவர்கள் இருவரையும் காணவில்லை. இது குறித்து பெற்றோர் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்திருந்தனர்.

இந்நிலையில் என் புதூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சிறுவர்கள் இருவரும் சடலமாக கிடந்ததை வயலுக்கு வேலைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டனர். இதுகுறித்து வாங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jun 2021 9:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!