/* */

நூதன கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீசார்

கரூரில் போலீசார் நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நூதன கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீசார்
X

கரூர் நகராட்சி வெங்கமேடு பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் குளுக்கோஸ் பாட்டிலை வைத்தபடி உலா வந்தார். மேலும் அவர் தன்னை கொரோனா நோயாளி என்று சொல்லியபடி, தனக்கு உதவுங்கள் என்று சாலையில் திரிந்த பொதுமக்களிடமும், வாகனங்களில் சென்றவர்களிடம், கூறினார்.

மேலும் அந்த வாலிபருக்கு பின்னால் போலீசார் கொரோனா நோயாளியை பிடியுங்கள், அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்துவிட்டார் என்று கூறியபடி துரத்தி வந்தனர். இதை கேட்ட பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

இதனால் வெங்கமேடு சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஓட்டம் பிடித்த பொதுமக்களை வெங்கமேடு காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார், இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றும், கொரோனா நோயாளி போன்று சித்தரிக்கப்பட்ட வாலிபரை கண்டு அச்சமடைய தேவையில்லை என்றும் தெரிவித்தனர். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இதையடுத்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், கரூர் நகர பகுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளில் நடமாடி வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம்.

எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். கடை, மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிவதும் அவசியம். காலை 10 மணிக்கு மேல் சாலையில் நடமாட கூடாது என்றனர்.இதேபோல் வாங்கபாளையம் பகுதியிலும் போலீசார் இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

Updated On: 20 May 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!