/* */

குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு புகார்

கரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு புகார் மனுவை மக்கள் அனுப்பி உள்ளனர்.

HIGHLIGHTS

குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு புகார்
X
கரூர் மாவட்டம் தென்னிலை பிர்கா மக்கள் முதல் அமைச்சருக்கு அனுப்பி உள்ள புகார் மனுவின் நகல்

கரூர் மாவட்டம் புகழூர் தாலுகாவை சேர்ந்தது தென்னிலை. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தற்போது ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிலை பிர்காவில் வசிக்கும் மக்கள் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

குடும்ப அட்டை இல்லாத மக்கள் எளிய முறையில் குடும்ப அட்டை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செலுத்தும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி மக்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனர். தென்னிலை பிர்காவிற்கு உட்பட்ட மக்கள் புகழூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

இப்படி விண்ணப்பம் செய்தவர்களின் செல்போன் எண்ணிற்கு 9524515515 என்ற குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது அதில் பேசும் நபர் நீங்கள் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பம் செய்து இருக்கிறீர்கள்.எனக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தால்தான் குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு தொடர முடியும் என கூறி வருகிறார்.

இப்படி மொஞ்சனூர் கிராமத்தில் மூன்று பேரிடமும், மீனாட்சி வலசு கிராமத்தில் இரண்டு பேரிடமும் அந்த நபர் தலா ரூபாய் ஐந்தாயிரம் வசூல் செய்திருப்பதாகவும் புகழூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 100 பேரிடம் இப்படி பணம் வசூல் செய்திருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளது. பணம் கொடுக்க மறுப்பவர்களது விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏழை எளிய மக்களுக்கு எளிதாக நக்ஷகுடும்ப அட்டை கிடைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு இடையூறாக செயல்படும் இதுபோன்ற இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடியில் ஈடுபடும் நபர் நியாயவிலைக் கடை பணியாளர் என தெரிய வந்துள்ளதால் அவர்மீது முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 26 Sep 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  2. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  3. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  4. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  7. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  8. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  9. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு