/* */

ஏலச் சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி

கரூர் அருகே ஏலச் சீட்டு நடத்தி சுமார் 50 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டு தலைமறைவான நபர்.

HIGHLIGHTS

ஏலச் சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி
X

கரூர் மாவட்டம், தோகைமலையை அடுத்துள்ளது கீழவெளியூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியுள்ளதாவது, கீழவெளியூரில் ஏலச் சீட்டு நடத்தி வரும் சரவணனிடம் கீழவெளியூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் 1 லட்ச ரூபாய் ஏலச் சீட்டு போட்டுள்ளனர். மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் கட்டி வந்துள்ளனர். மாதத்திற்கு 5 சீட்டுகள் என 100 பேர் ஏலச் சீட்டில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் சீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டும், ஏலம் எடுத்தவர்களுக்கு சீட்டுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று கேட்டால் மிரட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக தோகைமலை காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்த உரிய விசாரணை நடத்தி, ஏலச் சீட்டு நடத்தி தலைமறைவாக உள்ள சரவணனிடமிருந்து பொதுமக்கள் செலுத்திய பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

Updated On: 27 April 2021 1:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது