கரூர்: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி
![கரூர்: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி கரூர்: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி](https://www.nativenews.in/h-upload/2021/06/09/1092803-screenshot20210609150137.webp)
கரூர் அருகிலுள்ள தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 15,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
தோகை கலாம் நற்பணி மன்றம் மற்றும் தங்கம் சகோதரர்கள் சார்பில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் முன்களபணியாளர்களுக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவப் படுத்தினார். மேலும் சுமார் 15,000 ரூபாய் மதிப்புள்ள கையுறை, கிருமிநாசினி, முகக்கவசம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகுப்பு 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணமாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தோகை கலாம் நற்பணி மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தங்கம் சகோதரர்கள் நற்பணி குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu