கரூர்: 4 தொகுதியிலும் திமுக வெற்றி
மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக தலைவர் கலைஞரின் பொற்கால ஆட்சியை தமிழகத்திற்கு வழங்குவோம் என வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் 4 தொகுதிகளில் வேட்பாளர்களும் அதிமுக சார்பில் மூன்று தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. அதன் அடிப்படையில் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சிவகாமசுந்தரி, குளித்தலை தொகுதியில் மாணிக்கம் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டனர். தேர்தல் பரப்புரையில் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தீவிரமாக மேற் கொண்டனர்.
வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தளவாபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த்து.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர்கள் அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, குளித்தலை மாணிக்கம் ஆகிய மூன்று வேட்பாளர்களும் தொடர்ந்து முன்னணியில் இருந்தனர்
கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி அதிமுக வேட்பாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதி நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமிரிந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.
சான்றிதழ்களை பெற்ற பிறகு திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் மகத்தான வெற்றியை திமுக கிடைத்துள்ளது. கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதியிலும் திமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் அளித்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி திமுக தலைவர் கலைஞர் கலைஞரின் பொற்கால ஆட்சியை தமிழகத்துக்கு வழங்குவோம் என பேட்டியளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu