/* */

''நம் நாட்டின் பெண்கள் திறமைசாலிகள்''-தெலுங்கானா கவர்னர் தமிழிசை

நம் நாட்டின் பெண்கள் திறமைசாலிகள் என குமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.

HIGHLIGHTS

நம் நாட்டின் பெண்கள் திறமைசாலிகள்-தெலுங்கானா கவர்னர் தமிழிசை
X

பத்ரேஸ்வரி அம்மன் கல்வியியல் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்த .தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது கூட்டாலுமூடு பகுதியில் அமைந்துள்ள பத்ரேஸ்வரி அம்மன் கல்வியியல் கல்லூரி.

இந்த கல்லூரியில் பயின்று பட்ட படிப்பை முடித்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா காரணங்களால் கடந்த இரண்டு வருடங்களாக பட்டமளிப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து இன்று பட்டமளிப்பு விழா நடந்தது.

இந்த விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த அவர் அங்கிருந்து விழா மேடைக்கு வந்து குத்துவிளக்கு ஏற்றி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பெண்கள் எப்போதும் தைரியம் மிக்கவர்களாக இருக்கவேண்டும் காரணம் நமது நாட்டின் பெண்கள் மிகவும் திறமைசாலிகள் தன்னம்பிக்கையுடன் இருந்தால்தான் மகிழ்ச்சியாக வாழமுடியும்.

மேலும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது புகுந்த வீட்டில் இருந்து தாய்வீட்டிற்கு வந்திருக்கும் மகிழ்ச்சியை தந்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் ஆளுநருக்கு நினைவு பரிசை வழங்கி கவுரவித்தனர்.

Updated On: 27 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது