/* */

3,500 அடி உயர காளிமலை கோவிலில் விமரிசையாக நடந்த பொங்கல் விழா

குமரியில் 3.500 அடி உயரத்தில் அமைந்துள்ள காளிமலை கோவிலில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

3,500 அடி உயர காளிமலை கோவிலில் விமரிசையாக நடந்த பொங்கல் விழா
X
காளிமலை கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் அமைந்துள்ள காளிமலை துர்காதேவி கோவில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று லட்சகணக்கான பெண்கள் சுமார் 3 - கிலோ மீட்டர் தூரம் நடந்து மலையேறி சென்று பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் நிகழ்ச்சி கோவில் நிர்வாகிகளுடன் சாதாரணமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி பொங்கல் விழா பல ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக மற்றும் கேரள பா.ஜ.க. தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு துர்கா தேவியை தரிசித்து விட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சார்ந்த பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், காணி இன மக்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து துர்கா தேவிக்கு படையலிட்டு வழிபட்டனர்.

Updated On: 16 April 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...