/* */

குமரியை குளிர்வித்த தொடர் மழை, விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

குமரியை குளிர்வித்த தொடர் மழையால் அனைத்து அணைகளும் நிரம்பியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

குமரியை குளிர்வித்த தொடர் மழை, விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
X

குமரியில் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியுற்று வந்தனர்.

இந்நிலையில் கேரளாவில் பருவமழை தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இந்த மழையின் காரணமாக குமரியில் நீடித்து வந்த வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

இதனிடையே மாவட்டத்தில் மலையோர பகுதிகளிலும் மழை தொடர்வதால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல் உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் விவசாய தேவைகள் நிறைவேறும் என்பதோடு குடிநீர் பஞ்சமும் தீரும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 12 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...