கோடி அர்ச்சனை பூஜையுடன் தொடங்கிய செங்கல் சிவன் பார்வதி கோவில் விழா

X
By - A. Ananthakumar, Reporter |18 Nov 2021 7:45 PM IST
செங்கல் சிவன் பார்வதி கோவில் 60 வது ஆண்டு விழா, கோடி அர்சனை பூஜையுடன் தொடங்கியது.
கேராள மாநிலத்தில், திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கல் என்றும் பகுதியில், புகழ் பெற்ற சிவன் பார்வதி கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டும், 60 -வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த கோவிலின் ஆண்டை முன்னிட்டும் இங்குள்ள சிவனுக்கு 20-வது கோடி அர்ச்சனை மற்றும் கணபதி ஹோமத்துடன் திருவிழா துவங்கியது.
கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியை, கேரளா போக்குவரத்துறை அமைச்சர் ஆன்டனி ராஜ் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய கோடி அர்ச்சனை, மார்ச் 1 ஆம் தியதி வரை தொடர்ந்து நடைபெறும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu